Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கத்தியை காட்டி மிரட்டிய சரித்திர பதிவேடு ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கடந்த 27.03.22-ந்தேதி திருவானைக்கோவில் ட்ரங்க்ரோட்டில் நடந்து சென்றவரிடம் கத்தி காட்டி மிரட்டி பணம் ரூ.2000-ஐ பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரி வசந்த் (எ) கும்பக்குடி வசந்த் (23) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி வசந்த் (எ) கும்பக்குடி வசந்த் மீது கடந்த 2020ம் ஆண்டு திம்மராயசமுத்திரத்தில் கோவில் திருவிழாவின்போது ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கும், 2021ம் ஆண்டு கோவில் திருவிழாவின்போது கத்தி மற்றும் கட்டையால் ஒரு வீட்டின் கூரை, இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி வழக்கும் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரி வசந்த் (எ) கும்பக்குடி வசந்த் தொடர்ந்து அடிதடி சம்பவங்களில் ஈடுபடுவதும், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல்ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *