Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி அருகே அரியலூரில் ரூ.77 லட்சம் பறிமுதல்-ஒருவர் கைது 

திரு.ஜிஎம் ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. K. P. செபாஸ்டியன் அவர்கள் தலைமையில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமான கடத்தல் பொருட்களை கொண்டு செல்வது தொடர்பாக திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் நடத்திய சோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில் இன்று 01.03.2025 திருச்சிராப்பள்ளி ஜங்சன் ரயில்வே பாதுகாப்

பு படையின் கீழ் இயங்கும் அரியலூர் புறக்காவல் நிலையத்தில் திரு.சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்/RPF/அரியலூர் மற்றும் படை அங்கத்தினர் நடத்திய சோதனையின் போது சந்தேகத்தின் பேரில், ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணையில் அவர் வினோத்குமார், வயது 28, ச/ஒ வேல்சாமி, எண். 1/37, மெயின் ரோடு மேலமாத்தூர் பெரம்பலூர் மாவட்டம்.621708, என்பதும் அவர் வைத்திருந்த பையில் ரூ.77,06,180/-( ரூபாய் எழுபத்தேழு லட்சத்து ஆறாயிரத்து நூற்றி எண்பது) பணம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மேற்கூறிய ரொக்கத் தொகையை எடுத்துச் செல்வதற்கும் எந்த ஆவண ஆதாரமும் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அவர், சென்னை கடற்கரையில் இருந்து பெரம்பலூர் மேலமாத்தூரில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்ல வண்டி.எண். 12663 எக்ஸ்பிரஸ் (எ.கா. HWH-TPJ) வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் மேல்விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நபரையும் அவர் வைத்திருந்த மேற்கூறிய பணத் தொகை ரூ.77,11,640/- மற்றும் செல்போனையும் திருச்சி வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் திரு.அமித் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன்  செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *