Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

பொறியியல் துறையை தேர்வு செய்யும் மாணவர்களுக்காக சாரநாதன் கல்லூரி வழங்கும் “SARAVISIT 2022”

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில்  பள்ளி மாணவர்கள் தங்களுடைய பொறியியல் கனவை நிறைவேற்றுவதற்கு  கல்லூரியை நேரில் வந்து பார்வையிட்டு கல்லூரியில் இருக்கும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சாராவிசிட் 2022  என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

நாளை நடைபெற உள்ள இந்நிகழ்வில்  பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரடியாகவே கல்லூரிக்கு சென்று கல்லூரி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம் சாரநாதன் பொறியியல் கல்லூரியை சேர்ந்த குழுவினர் மாணவர்களுக்கு கல்வி குறித்த விளக்கமும் கல்லூரி இருக்கும் சிறப்பம்சங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து விளக்க உள்ளனர்

கல்லூரிக்கு வர இருக்கும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்காக பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும்  ரயில்வே நிலையத்திலிருந்தும் காலை 8.45 மணிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்நிகழ்வானது காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் கல்லூரி வளாகம் மற்றும் கல்லூரியில் இருக்கும்  தொழில்நுட்பத்தையும் வகுப்பறைகளும்  பார்த்துசெல்லாம் மேலும் துறைகள் குறித்த பல சந்தேகங்களுக்கு தீர்வளிக்க உள்ளனர்.

 மாணவர்கள் சிறந்த முறையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *