Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பள்ளி மாணவிக்கு பத்து இடங்களில் கத்திக்குத்து வாலிபர் தப்பி ஓட்டம்

திருச்சி மாவட்டம். மணப்பாறை அத்திகுளம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் 16 வயது மகள் சுவேதா திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.

தொடர்ந்து பள்ளியில் தேர்வு முடிந்து நடந்து சென்ற பள்ளி மாணவியை திருச்சி ரயில்ரோடு மேம்பாலம் பகுதியில் வாலிபர் ஒருவர் மாணவியின் கழுத்து உட்பட 10 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவியை சிகிக்கைகாக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த 6-மாதத்திற்கு முன்பு பள்ளி மாணவியை பொத்தமேட்டுப்பபட்டிபகுதியை சேர்ந்த கேசவன் என்ற வாலிபர் மாணவியிடம் வம்பு செய்ததாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்,வெளியே வந்த வாலிபர் இந்த செயலை செய்து இருப்பார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *