Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் அலற வைக்கும் பேரூராட்சி போஸ்டர்

தீபாவளி வந்தாலே அனைவருக்கும் கொண்டாட்டம். அனைத்து துறை அதிகாரிகள், வணிக நிறுவனத்தினர் உள்ளிட்டோர் தங்களது வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் மாறி மாறி இனிப்புகள் பரிசுகளை வழங்கி மகிழ்வர்.

ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்து தனியார் நிறுவனங்களும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இது ஒரு புறம் இருக்க திருச்சி உப்பிலியாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒரு அதிர்ச்சிகரமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் நிருபர்களுக்கு நன்கொடை இல்லை.

தீபாவளிக்காக பத்திரிக்கையாளர்கள் நன்கொடை கேட்டு வர வேண்டாம் அவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு இப் பேரூராட்சியில் வழிவகை இல்லை என்றும் இப்படிக்கு உப்பிலியபுரம் பேரூராட்சி நிர்வாகம் என வாசலில் போஸ்டரை ஒட்டி வைத்துள்ளனர்.

ஒருவேளை இந்த போஸ்டர் ஒட்டியதற்கு காரணம் பெரிய தொந்தரவை உப்பிலியாபுரம் பேரூராட்சி சந்தித்ததா என்று தெரியவில்லை. தொல்லை தாங்க முடியாமல் போஸ்டரை ஒட்டி உள்ளார்களா என அங்கு வந்து செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் பேசிக்கொண்டே செல்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய… 

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *