Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்

2015 ஆம் ஆண்டு திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெற்ற மாநாட்டில்
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் எண் : 2-ல் ஆஜராகினார் – குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி திரிவேணி மீண்டும் அவரை ஏப்ரல் 21-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… 2015-ல் இன எழுச்சி மாநாடு நடத்திய போது அதில் கலந்து கொண்ட 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சொல்ல போனால் மேடையில் ஏறிய அனைத்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் 5,000 கோடி வரை இவர்கள் செலவு செய்கிறார்கள் – 6500 கோடி முதலீடு கொண்டு வந்ததாக கூறுகிறார்கள் – இது பெரியவர்கள் விளையாட்டு இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். லுலு மார்கெட் தொடர்பாக : இது முதலீடே அன்னிய முதலீடு – கப்பலில் வந்து அவர்களை விரட்டிவிட்டு வானூர்தியில் வருபவருக்கு சிகப்பு கம்பளம் விரிக்கிறார்கள் – லுலு மார்கெட் முழுவதும் வட இந்தியவர்கள் தான் வேலை செய்ய போகிறார்கள் – அரசியலையும் இங்கு உள்ள நிலைபாடுகளை வட இந்தியர்களே தீர்மானிப்பார்கள் – இது முற்றிலும் பேராபத்தை நோக்கி செல்லும்.

நீட் விலக்கு தொடர்பாக ஜனாதிபதியை முதல்வர் சந்திக்க வேண்டும் – உங்களில் ஒருவன் என்கிற புத்தகத்தை முதல்வர் எழுதி தென் மாநிலங்களில் உள்ள பல மாநில முதல்வர்களை அழைத்து வெளியிட்டார் அதேபோல எல்லோரையும் அழைத்து எல்லாம் மாநில சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி நீட்டுக்கு எதிரான மாநாடு ஒன்றை முதல்வர் நடத்தலாம். 90 விழுக்காடு குற்றங்கள் நிறைந்த போதையில் தான் நடக்கிறது – ஆனால் அதில் தான் அரசாங்கமே நடைபெறுகிறது என்று கூறுகிறீர்கள்.

ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட எல்லா அரசு அதிகாரிகளும் துபாய் சென்று உள்ளார்கள் ? அரசு அதிகாரிகள் செலவை ஏன் திமுக ஏற்க வேண்டும் ? என்கிற கேள்வி எழுகிறது. இலங்கையில் நடைபெற்று வரும் பொருளாதார சரிவு. அடுத்த இரண்டு ஆண்டில் இதே நிலைமை நம் நாட்டிற்கும் வரும், இரண்டு ஆப்பிள் 450 ரூபாய் என்றால் அதே நிலை இங்கும் வரும். ஏனென்றால் நாம் ஏற்றுக் கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கை அப்படி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *