Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 1200 பாட்டில் டாஸ்மாக் மதுபானங்கள் பறிமுதல் – 4 பேர் கைது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை 19ம் தேதி நடைபெறுவதால் கடந்த 17ஆம் தேதியன்று மதுபான கடைகளும் ,கூடங்களும தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் மூடப்பட்டது. இந்நிலையில் திருச்சி இபி ரோடு அந்தோணியார் கோவில் தெருவில் டாஸ்மார்க் மதுபானங்களை விற்பதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ68ஆயிரம் மதிப்புள்ள  547 டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கோட்டை போலீசார்  பறிமுதல் செய்தனர். வீரபத்திரன் கோமதி  இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் திருச்சி மணிகண்டத்தை அடுத்த நாகமங்கலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும்  மணப்பாறை கோவில்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரிடமிருந்த 700-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்  மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *