Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உதவி காவல் ஆய்வாளர் தேர்வு திருச்சியில் 64 பேர் ஆப்சென்ட்

தமிழக காவல்துறையில் 2022 ஆம் ஆண்டிற்கு காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு இன்று காலை மற்றும் பிற்பகலில் என இரு தேர்வு நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி எஸ்ஆர்எம் இன்ஜினியர் கல்லூரி எம்ஏஎம் இன்ஜினியர் கல்லூரி உள்ளிட்ட ஆறு இன்ஜினியரிங் கல்லூரியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கிய முதன்மை தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகல் மூன்று முப்பது மணி வரை முதல் ஐந்து முப்பது மணி வரை தமிழ்மொழித் தேர்வு நடைபெறுகிறது. இதர தேர்விற்கு வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறன. திருச்சி மாவட்டத்தில் 6 மையங்களில் 8 ஆயிரத்து 553 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இன்று காலை நடைபெற்ற தேர்வில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 386 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 322 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 64 பேர் தேர்வு எழுதவில்லை. 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *