Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் சிறுதானிய உணவுத்திருவிழா

திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023 கொண்டாடும் வகையிலும் பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து நுகர்வோர்களாகிய பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் உள்ளடக்கிய சிறுதானிய உணவுத்திருவிழாவை இன்று (09.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து சிறுதானிய உணவுகளின் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

இந்த சிறுதானிய உணவுக் கண்காட்சியில், கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, சோளம், குதிரைவாலி ஆகிய சிறுதானியங்களைப் பற்றி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறுதானியத்தை பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023 கொண்டாடும் வகையிலும் பள்ளி, கல்லூரி, அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்களால் சிறுதானிய அரங்குகளையும் அமைக்கப்பட்டிருந்தது. சிறுதானியத் திருவிழாவில் சிறுதானியத்தால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

சிறப்பாக அரங்குகள் அமைத்த காவேரி பெண்கள் கல்லூரி, பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கண்ணுக்குளம் வட்டம், முசிறி ஆகிய அமைப்புகளுக்கு முறையே முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு தலா ரூ.5,000/-, ரூ.4,000/- மற்றும் ரூ.3,000/- ரொக்கப் பணம், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், வழங்கி பாராட்டினார். மேலும், அய்மான் கல்லூரி, ஜமால் முஹமது கல்லூரி, பிஷப் கீபர் கல்லூரி மற்றும் மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில் நுட்பவியல் கல்லூரி, துவாக்குடி. ஆகிய கல்லூரிகளுக்கு சிறப்பு பரிசினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற வாசகம் அடங்கிய வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு, செல்பி ஸ்டேன்டில் புகைப்படம் எடுத்துக்கொண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சக்திவேல், மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, மகளிர் சுயஉதவிக்குழுவினர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *