துபாயிலிருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வரும் பயணி தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பெயரில் திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பயணி ஒருவர் அவரது மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 1081 கிராம் பேஸ்ட் போன்ற 3 பாக்கெட்டுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரூ.70.58 லட்சம் மதிப்புள்ள 977 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments