Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் மாமியாருக்கு சிகரெட்டால் சூடு வைத்த மருமகன்

திருச்சி திருவானைக்காவல் முறக்கார பகுதியில் சேர்ந்தவர் கார்த்திக்.இவரது மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால் தொடர்ந்து மாமியார் மருமகனுக்கு சண்டை வந்து கொண்டே இருந்துள்ளது.இந்நிலையில் மருமகன் கார்த்திக் மாமியார் தேவியும் இன்று கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் மருமகன் மாமியார் கன்னத்தில் அறைந்து கட்டையால் அடித்து உதைத்து உள்ளார். மேலும் கையில் வைத்திருந்த சிகரெட்டால் மாமியார் கழுத்தில் சூடு வைத்துள்ளார்.

மாமியார் அலறல் சத்ததால் கார்த்திக் தப்பிச் சென்றார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவானைக்காவல் பகுதியில் மாமியாருக்கு மருமகன் சண்டையில் மருமகன் மாமியாருக்கு சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *