Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார்துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (26.07.2024) அன்று (வெள்ளிகிழமை) சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு புதிய மற்றும் அனுபவமிக்க வேலை நாடுநர்களை அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப நிரப்ப உள்ளனர். மேலும் பணியில் சேரும் நபர்களுக்கு இந்நிறுவனத்தால் பெட்ரோல், உணவுப்படி மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ. இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் தங்களது சுய் விவரக்குறிப்பு (Bio-data), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் உள்ள 3500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. வேலைநாடுநர்கள் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும்

இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0432- 2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *