Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி, ஸ்ரீ பெரியசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி திருவள்ளுவர்நகரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பாலசுப்பிரமணியம் சுவாமி, ஸ்ரீ பெரியண்ணா சுவாமி பரிவார ஸகித தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருக்குட பெரும் நன்னீராட்டு சாந்தி விழாவிற்காக கடந்த எட்டாம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு காப்பு கட்டப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நேற்று காவிரி தென்கரை கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு நேற்று மாலை ஆறு மணி அளவில் மங்கள வாத்தியங்களுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆனி மாதம் 2ம் தேதியான இன்று (16ஆம் ) காலை 6 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்ற பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடகம் புறப்பட்டது. 9.45 மணி அளவில் கோபுரத்தின் கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும், பெரியசாமிக்கும் புனித ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மகா தீபாரதனையில் தாளக்குடி, வாளாடி, கூத்தூர், கீரமங்கலம், அகிலாண்டபுரம் உள்ளிட்ட கிராமத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கீரமங்கலம் தாளக்குடி திருவள்ளுவர் நகர் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *