திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் இவரது மனைவி ராதிகா (44). அதே கிராமம் கொசவன் திடலை சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி(48) ஆகிய இரண்டு விவசாய கூலிதொழிலாளிகளும் மின்சாரம் தாக்கி ( மே 10 அன்று) உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்று தருவதாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நிவாரண தொகைக்கான ஆணைகளை எம்எல்ஏ பழனியாண்டி வழங்கினார்.
உடன் தலைமை பொறியாளர் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments