Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுத்தேர்தல்

தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநிலத் தலைவராக முன்னாள் மாநிலப்பொருளாளர் திரு.அழகிரிசாமி, மாநிலப் பொதுச் செயலாளராக மோகனரங்கன், மாநில பொருளாளராக நாமக்கல் மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர்களாக செந்தில்நாதன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் குபேந்திரன், மாநில தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் வடக்கு மண்டல செயலாளர் செந்தில்குமார்.

மாநில அமைப்புச் செயலாளராக விருதுநகர் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், வடக்கு மண்டல செயலாளராக பண்ருட்டி வட்ட செயலாளர் பக்கிரிசாமி, மத்திய மண்டல செயலாளராக முன்னாள் மத்திய மண்டல செயலாளர் வாசுதேவன், மேற்கு மண்டல செயலாளராக முன்னாள் மாநில துணைத்தலைவர் சுரேஷ், தெற்கு மண்டல செயலாளராக தென்காசி மாவட்ட செயலாளர் சின்ராஜ் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் மாநில பிரச்சார செயலாளராக பொய்யாமொழி போட்டியின்றி தேர்வுசெய்யப்படனர்.

மாநில பொதுத்தேர்தலை புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட்டு சிறப்பான முறையில் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையாளர்களுகுகும் தேர்தலை சிறப்பாக நடத்திட முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறையினருக்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வாக்களித்த மாவட்ட வட்ட பொறுப்பாளர்கள்,

தேர்தலை சிறப்பாக ஏற்பாடு செய்ய தங்களது பங்களிப்பைச் செய்த மேனாள் இந்நாள் மாவட்ட வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆற்றல் மிகு உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *