Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எலி பேஸ்ட் சாப்பிட்டு போலீசார் விசாரணைக்கு வந்த கொள்ளையனால் பரபரப்பு

சேலம் அஸ்தம்பட்டி சுந்தர கணபதி கோவில் அருண் நகரை சேர்ந்தவர் பரணிதரன் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கோகுல் (18). இவர் நவல்பட்டு காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  கடந்த   ஆண்டு 2 பைக் திருட்டு வழக்குகள், 4 வீடுகளில் வீடு புகுந்து 34 பவுன் கொள்ளையடித்த வழக்கில் தொடர்பு உள்ளது. மேலும் கோகுல் மீது சேலம் கன்னங்குறிச்சியில் ஒரு திருட்டு வழக்கும், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.

இந்த நிலையில் கோகுல் குண்டூரில் அருகே உள்ள அய்யனார் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருவதாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் கோகுலை விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு போனில் அழைத்துள்ளனர். இதனையெடுத்து புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் குமாரமங்கலத்தில் உள்ள தனது அண்ணன் கார்த்திகேயனை துணைக்கு அழைத்துக்கொண்டு நவல்பட்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது கோகுல் காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத நவல்பட்டு போலீசார் மற்றும்  கார்த்திகேயன் உடனடியாக கோகுல் முகத்தில் தண்ணீர் தெளித்து விசாரித்த போது.. கோகுல் போலீசார் விசாரணைக்கு பயந்து வரும்போதே எலி பேஸ்ட்டு சாப்பிட்டு வந்தது தெரியவந்தது. உடனடியாக கார்த்திகேயன் நவல்பட்டு போலீசார் உதவியுடன் தனது தம்பி கோகுலை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *