Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி!!

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வேங்கை குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவருடைய மகன் மணிகண்டன் (20). திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படித்து வந்துள்ளார். 

Advertisement

இவர் நண்பர்களுடன் நேற்று முன்தினம் முக்கொம்பு பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு காவேரி ஆற்றில் குளிக்கச் சென்ற மணிகண்டன் ஆழம் அதிகமாக உள்ள பகுதிக்கு செல்வதை பார்த்து நண்பர்கள் கூச்சலிட்டனர். பின் தீயணைப்பு போலீசார் வந்து மணிகண்டனை மீட்டனர். ஆனால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஜீயபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *