Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் எதிரொலி : 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்தது தெற்கு ரயில்வே!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதையொட்டி, நாளையும், மே 2ஆம் தேதியும் 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும், திருச்சி – காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – புதுச்சேரி, திருச்சி – கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

முழுமுடக்க நாளான நாளை ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *