Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாவட்ட மைய நூலகத்தில் 30-ந் தேதி தமிழ் மொழி பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம் இணைந்து வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:00 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான தமிழ்மொழி பயிற்சி, நூல் விமர்சனம் மற்றும் ஓவியப்பயிற்சிகளை நடத்த உள்ளது.

இந்த பயிற்சியில் (5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறார்கள் கலந்து கொள்ளலாம்). பயிற்சியில் பங்கேற்கும் சிறார்கள் குறிப்பேடு மற்றும் ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் எடுத்து வர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களில் விருப்ப முள்ளவர்கள் தாங்கள் வாசித்த நூல்களில் ஏதேனும் ஒன்றை 3 நிமிடத்துக்குள் விமர்சனம் செய்யலாம்.

முன்பதிவின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 88257 90004 என்ற (வாட்ஸ்அப்) எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை என்று மாவட்ட மைய நூலகம் முதல்நிலை நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *