Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாத்து, ரோந்து பணி செய்யவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.

அதனால் காவல் நிலையங்களின் கோப்புகள் சரியாக பராமரிக்கப்பட்டு, குற்றங்கள் குறைந்தும்
பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தும்,

வழக்குகளின் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்தும், வழக்குகளை விரைவில் முடித்து கொடுத்தும், மேலும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை 
நடவடிக்கையும் மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் 
நிலையத்திற்கான பரிசு அறிவிக்கப்பட்டது.

அதன்படி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கான கேடயத்தை காவல் 
ஆய்வாளர் சேரனிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள். திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் முத்தரசு மற்றும் கண்டொன்மென்ட் சரக உதவி ஆணையர் அஜய்தங்கம் உடனிருந்தார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *