Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழகத்தின் மூன்றெழுத்து அரசியல் வாரிசு போஸ்டர் – பரபரப்பு

தமிழக வெற்றிக்கழக மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விக்கிரவாண்டி வி சாலையில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் கட்சியின் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சியில் விஜய் ரசிகர் மன்ற முன்னாள் பொறுப்பாளர் ராஜா மாவட்டம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி தற்பொழுது கட்சியில் உள்ள நிர்வாகிகளை அதிரடித்துள்ளார். கட்சி மாநாட்டை தலைவர் அறிவித்தவுடன் போஸ்டர் பேனர் என எதையும் வைத்து விளம்பரப்படுத்தாத பொறுப்பாளர்கள் மத்தியில் முன்னாள் நிர்வாகி ஈவெரா, அண்ணா, எம்ஜிஆர் தமிழகத்தின் மூன்றெழுத்து அரசியல் வாரிசு ‘விஜய்’ என குறிப்பிட்டு மாநாட்டுக்கு வரவேற்பு போஸ்டர்களை ஒட்டி தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கட்சி பொறுப்பாளர்கள் இருக்கும் பொழுது முன்னாள் பொறுப்பாளர் முந்திக்கொண்டு போஸ்டரை திருச்சியில் அடித்து ஒட்டி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார் என த.வெ.க கட்சி தொண்டர்கள் பேசி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *