Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கஞ்சா விற்ற வாலிபர் கைது – 500 கிராம் கஞ்சா பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள புரத்தாக்குடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக சமயபுரம் காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று சோனையில் ஈடுபட்டார்.

அப்போது வாலிபர் ஒருவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது போலீசாரின் சோதனையில் தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை செய்ததில் லால்குடி அருகே நெற்குப்பை மலை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த வேளாங்கண்ணி (32) என்கின்ற முருகானந்தம் என தெரியவந்தது.

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *