மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திருந்துவிடப்பட்டுள்ளதால், முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகமாகி மேற்படி முக்கொம்பு அணையில் இருந்து காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக வருவதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆற்றுப்பகுதிகளில் பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ “செல்பி” (Selfie) எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, காவேரியாற்றில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டாலோ, அல்லது தகவல் ஏதும் அளிக்க நினைத்தாலோ கீழ் காணும் காவல்துறை உதவி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
நுண்ணறிபிரிவு அலுவக எண் : 0431 2331929 / 94981 00615
நுண்ணறிபிரிவு வாட்ஸ்அப் எண் : 96262 73399
கட்டுப்பாட்டு அறை அலுவக எண் : 0431-2418070
கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் எண் : 93840 39205.
Comments