Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்கிற அபு (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2  படித்து வந்த நிலையில் நேற்று தனது நண்பர்கள் 4 பேருடன் கம்பரசம்பேட்டை தடுப்பணையில் அபு குளித்து கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அபு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதுக்குறித்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவலின் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை முதல் அபுவை, தீயணைப்பு துறையினர் இரவு 12 மணி வரை தேடிய நிலையில் அதிக பனிப்பொழிவு காரணமாக தேடும் நிறுத்தப்பட்டது. பின்னர்  இன்று காலை முதல் மாணவனை தேடிய தீயணைப்பு துறையினர் குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை அருகே அபுவை சடலமாக கண்டெடுத்தனர்.

பின்னர் காந்தி மார்க்கெட் போலீசார் மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *