Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

திருச்சி கொள்ளிட ஆற்றில் கடந்த (26.8.2023) திருச்சி மலைக்கோட்டை, தாயுமானவர் சந்து, சறுக்கு பாறை பகுதியைச் சேர்ந்த ஆதி ஸ்ரீ ஹரிஹரசுதன் என்ற சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் அவருடன் படிக்கும் சிறுவர்களுடன் குளிக்கும் போது ஆழமான பகுதியில் மூழ்கி காணாமல் போன வரை கடந்த இரண்டு நாட்களாக தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று (28.8.23) காலை 8.00 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் (குளித்த இடத்தில் இருந்து 500 மீட்டர் கிழக்கே) தேசிய நெடுஞ்சாலை Y ரோடு ஜங்ஷன் சுடுகாடு அருகே உள்ள, கொள்ளிடம் ஆறு மணல் திட்டில் கரையில் இறந்த நிலையில் ஒதுங்கி இருந்த சிறுவனை தீயணைப்பு துறை மூலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *