Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த மாவட்ட தேர்தல் அலுவலர்

2024 பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் ரவுண்டானா அருகில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மா. பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி கீழசிந்தாமணி பகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை தேர்தல் திருவிழாவில் பங்கேற்க அவர்களின் இல்லங்களுக்கே சென்று அழைப்பிதழ்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப்குமார் இன்று (23.03.2024) வழங்கினார்.

இறுதியாக திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப்குமார் இன்று (23.03.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *