சேலம் மாவட்டம் எடப்பாடி பக்கநாடு, ஆணப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் தென்ராயன். இவரது மகன் மாதயன் (25). இவர் டால்மியா சிமெண்ட் கம்பெனியிலிருந்து சுண்ணாம்பு கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சங்ககிரியில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புள்ளம்பாடி வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது புள்ளம்பாடியில் உள்ள மேம்பாலத்தில் இறங்கும்போது லாரியின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதில் லாரி டிரைவர் மாதயன் கீழே குதித்துள்ளார். அப்போது லாரியின் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments