Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பாண்டிச்சேரிக்கு தப்பிய பிரபல ரவுடி பட்டரை சுரேஷ் குடும்பத்தோடு கைது

திருச்சி எஸ் பி வருன்குமாருக்கு பிரபல ரவுடிகள் பொதுமக்களிடமிருந்து போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை ஏமாற்றி பறித்துக் கொண்டதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி ஆப்ரேஷன் அகழி என்ற பெயரில் அதிரடியாக ஒரு குழுவிற்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற விதத்தில் 14 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 14சப் இன்ஸ்பெக்டர்கள் 42போலீசார் தனித்தனியாக 14 குழு அமைத்து திருச்சியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சம்பந்தப்பட்ட அந்த 14 ரவுடிகளுக்கும் தொடர்பில்லாத 258 சொத்து ஆவணங்களும், 68 வங்கி கணக்கு புத்தகங்களும், 75 புரோநோட்டுகளும், 82 நிரப்பப்படாத காசோலைகளும், 18 செல்போன்களும், 84 சிம்கார்டுகளும், பிற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

அப்படி கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கணக்கில் வராத 66 அசல் பத்திரங்களும், பாண்டிச்சேரி மது வகைகள் 31 பாட்டில்களும் திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி மைக்கேல் சுரேஷ் (எ ) பட்டரை சுரேஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.

மேற்படி கைப்பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்களும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பட்டறை சுரேஷ் வீட்டில் ஆள் இல்லாத நிலையில் அவர் எங்கு சென்றார் என போலீசார் அவரை வலை வீசி தேடி வந்தனர்.

 இந்த நிலையில் எஸ்பி தனி படை போலீசாருக்கு பட்டரை சுரேஷ் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு குடும்பத்தோடு சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற எஸ்பி தனிபடை போலீசார் மருத்துவமனை செல்லும் வழியில் பட்டறை சுரேஷை அவரது குடும்பத்துடன் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு பட்டரை சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தை கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *