திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பிரசிடெண்ட் ஹோட்டல் மற்றும் தங்கு விடுதி திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஹோட்டலில், சுத்தம் செய்வதற்காக ஐந்துக்கும் மேற்பட்ட வயதானவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது .
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கீழ ராமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி இவரது மனைவி ஜெயலட்சுமி, கூலி வேலை செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பொன்னுச்சாமி இறந்து விடவே,
இவரது மனைவி ஜெயலட்சுமி (67) சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் அருகாமையில் உள்ள கடைவீதி பகுதியில் பிரசிடெண்ட் ஹோட்டலில் பாத்திரம் சுத்தம் செய்வது, காய் நறுக்குவது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த பிரசிடெண்ட் ஹோட்டல் உரிமையாளர் மலர்கொடி வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டி ஜெயலட்சுமி என்னடி அங்கேயும் இங்கேயும் ஓடுற, வாடி போடி என தரை குறைவாக பேசியது மட்டும் அல்லாமல் உனக்கு சம்பளம் கிடையாது
ஹோட்டலை விட்டு வெளியே போடி என பேசியதால் ஆத்திரமடைந்த மூதாட்டி ஜெயலட்சுமி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் பிரசிடெண்ட் ஹோட்டல் உரிமையாளரான மலர்கொடியை விசாரணை செய்து வருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments