Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மனைவியுடன் தகாத உறவில் இருந்தவரை பட்டபகலில் ஓட ஓட விரட்டி வெட்டிய கணவர்

திருச்சி மலைக்கோட்டை தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (43). இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (45). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு, சந்துருவின் தங்கை விஜயலட்சுமியை காதலித்து, கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஒரு மகள் இருந்தார்.

கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி இறந்து விட, அவரது மகளும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்துருவுக்கும் அவரது மனைவி சத்யாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மைத்துனர் முறை கொண்ட சிவக்குமார், தங்கை முறை கொண்ட சந்துருவின் மனைவி சத்யாவுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்தார்.

சந்துரு இதை தொடர்ந்து  கண்டித்ததால், சத்யா, தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி, தற்போது சிவக்குமாருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு, இன்று பட்டப்பகலில் அரிவாளை கையோடு எடுத்து வந்து திருவானைக்காவல் ரயில்வே மேம்பாலத்தில் சிவக்குமாரை ஓட ஓட விரட்டி விரட்டி வெட்டினார்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள், சந்துருவை அரிவாளுடன் மடக்கி பிடித்தனர். அப்போது படுகாயமடைந்த சிவக்குமாரை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பாக காணப்படும் மேம்பாலத்தில் நடந்த இச்சம்பவம், வாகன ஓட்டிகளை பதை பதைக்க வைத்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *