Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நுழைவு வாயில் வளைவில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். லாரி ஓட்டுநரான இவர் குன்னூர் கிராமத்தில் ராமன் என்பவருக்கு சொந்தமான லாரியை ஓட்டி வருகிறார். இந்த நிலையில் லால்குடி அருகே உள்ள மலையடி வாரத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்போது லாரியின் ஹைட்ராலிக் பெட்டியை இறக்கி விடாமல் வந்தபோது முருகன் கோயிலின் நுழைவு வாயிலில் கட்டையின் மீது மோதியது. இதனால் நுழைவு வாயில் கட்டை உடைந்து சிக்கி லாரியின் பின்புற ஹைட்ராலிக் பெட்டி சிக்கி கொண்டது. மேலும் லாரியின் முன்பக்க டயர் மேலே தூக்கியது.

இந்த விபத்தால் லாரி அந்தரத்தில் நின்றதை அப்பகுதி மக்கள் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *