Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பழைய ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் சித்தையா மனைவி சிட்டம்மாள் (80). இவர் தனது வீட்டில் கதவை திறந்து வைத்து தனியாக உறங்கி கொண்டிருந்தராம். அப்போது வீட்டிற்குள் புகுந்த திடீர் நகரை சேர்ந்த பாஸ்கரன் மகன் ராமசந்திரன் (36) என்பவர் மூதாட்டியிடம் கழுத்திலிருந்த 3 சவரன் செயினை பறித்ததாக தெரிகிறது.

மூதாட்டியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததையடுத்து ராமசந்திரன் அங்கிருந்து ஓடியுள்ளார். புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு ராமசந்திரனை அதிகாரம் பகுதியில் வைத்து கைது செய்த துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *