திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண்:1 (ஶ்ரீரங்கம்) வார்டு எண் 04க்குட்பட்ட அம்பேத்கார் நகர் சுடுகாடு வளாக பகுதியில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்தும் மையம் இன்று (09.12.2022) மாநகராட்சி ஆணையர் மரு.இரா வைத்திநாதன் முன்னிலையில் மேயர் மு. அன்பழகன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகரப்பொறியாளர் ப. சிவபாதம்,மண்டல தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், துர்காதேவி, நகர் நல அலுவலர் மரு.சர்மிலி, செயற்பொறியாளர் குமரேசன், பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ப.ரவி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments