Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சண்டையை தடுத்த முதியவர் கொலை

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை அருகில் உள்ள முத்துராஜா பாளையம் மேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் அஜித் (23). இவர் வாங்கிய புதிய இருசக்கர வாகனத்திற்கு மாலை வாங்குவதற்காக அவரது நண்பர் முத்துராஜா பாளையத்தை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் கார்த்தி என்பவரை அழைத்து கொண்டு மேட்டுப்பாளையம் சென்றார்.

அங்கு  பூ மாலை வாங்கி கொண்டிருந்தபோது, முத்துராஜா பாளையத்தில் தனது அம்மாச்சி வீட்டில் வளர்ந்து வரும் சேலம் மாவட்டம் ஈச்சம்பட்டி அடுத்த சீலியம்பட்டி சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜய் (18), மது போதையில் கார்த்தியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் மீண்டும் மது போதையில் கார்த்தி வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது கார்த்தியின் தந்தை ஸ்ரீரங்கன் தகராறினை தடுக்க சென்றவரை விஜய் இவரது மாமன் விஜயகுமார் (30) இருவரும் ஸ்ரீரங்கனை கட்டையால் தலையில் அடித்ததில் ஸ்ரீரங்கன் சம்பவயிடத்திலேயே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுக்குறித்து தகவலறிந்த தா.பேட்டை காவல் ஆய்வாளர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் காயத்ரி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் இறந்து கிடந்த ஸ்ரீரங்கன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஸ்ரீரங்கனை தாக்கிய விஜய் மற்றும் விஜயகுமார் இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *