Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பேருந்து சக்கரத்தில் தலையை கொடுத்த நபர் – அலறி ஓடிய பயணிகள்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த பேருந்து நிலையத்தில் தஞ்சாவூர் மார்க்கத்தில் மஞ்சள் நிற சட்டையும், கட்டம் போட்ட கருப்பு கலர் கைலி அணிந்த 45 வயது மதிப்புதக்க ஒரு நபர் வெகு நேரமாக அங்கு சுற்றிக் கொண்டிருந்தார்.

பின்னர் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லக்கூடிய அரசு பேருந்து கிளம்பியவுடன் அந்த நபர் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதை கண்ட பேருந்து பயணிகள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து மத்திய பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு திருச்சிக்கு வந்து பேருந்து சக்கரத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் எதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார். மனநலம் பாதிக்கப்பட்டவரா? தற்கொலை செய்தற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… 

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *