Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கத்தியை காண்பித்து வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெல்ஸ் கிரவுண்ட் பிள்ளையார் கோவில் அருகில் கடந்த 21.10.21-ந்தேதி பார்த்திபன் (21) என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி எதிரிகள் 1) தர்மா (எ) தர்மராஜ் (27), 2) முருகனந்தம் 3) சுனில் ஆகிய மூன்று பேரும் கத்தியை காண்பித்து அவரிடமிருந்து ரூ-50,000/- பணத்தை பறித்து சென்றுவிட்டதாக பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டும், வழக்கின் எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணையில் இவ்வழக்கின் குற்றவாளியான எதிரி தர்மா (எ) தர்மராஐ் (27) என்பவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி எதிரி தர்மா (எ) தர்மராஜ் (27) என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து 22.10.21-ந் தேதியிலிருந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரி தர்மா (எ) தர்மராஜ் (27) என்பவருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின்படி ஆணையை 15.11.21-ந்தேதி சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *