Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாயமான கட்டுமான பொறியாளரை தேடி வரும் போலீஸ்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பிரியங்கா நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (52). கட்டிட பொறியாளரான இவர் தனியாக புதிய கட்டிடம் கட்டும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது மனைவி கவிதா (48) சிவசுப்பிரமணியத்தை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மேலும் வீட்டை விட்டு சென்ற பொழுது செல்போன் மற்றும் இருசக்கர வாகன சாவியையும் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து கவிதா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியத்தை தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *