Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மேம்பாலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த மழை நீர் குழாய் உடைந்து சாலையில் விழுந்தது – அதிர்டவஷமாக தப்பிய வாகன ஓட்டிகள்!

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் பகுதியில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் கீழ் வழியாக ஜங்ஷனிலிருந்து கே.கே.நகர் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் செல்லும். 

Advertisement

இந்நிலையில் இந்த மேம்பாலத்தின் மேல் தேங்கும் நீர் வடிவதற்காக மேம்பாலத்தின் அடிப்பகுதியில் இரும்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு மேலோக பயன்பாட்டிலுள்ள இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியிலுள்ள மழைநீர் வடிகால் இரும்பு குழாய் துரு பிடித்து உடைந்து சாலையின் நடுவே விழுந்தது. அப்போது எந்தவித வாகனமும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இது பற்றி தகவலறிந்து வந்து போக்குவரத்து போலீசார் அந்த வழியை தடுப்புகளை ஏற்படுத்தி வழியை அடைத்தனர். பின்னர் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேம்பாலத்திலிருந்து உடைந்து சாலையில் தொங்கி கொண்டிருந்த இரும்பு குழாயை அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *