Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கத்தியை காண்பித்து செல்போனை வழிப்பறி செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரில் கடந்த 06 ம் தேதி, கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம், இருசக்கர வாகன பார்க்கிங்கில் வேலை செய்யும் நபரிடம் கத்தியை காண்பித்து செல்போனை வழிப்பறி செய்ததாக புகார் பெறப்பட்டது.

இந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், பாலக்கரை குருவிக்காரத் தெருவை சேர்ந்த ரவுடி மணிகண்டன் (25) என்பவர் இக்குற்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் மணிகண்டன் மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், பாலக்கரை காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 3 வழக்கும், கத்தியை காண்பித்து வழப்பறி செய்ததாக 2 வழக்குகள் உட்பட மொத்தம் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது .

அதைத் தொடர்ந்து மணிகண்டனின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மணிகண்டனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று ஆயுதங்களை காண்பித்து குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *