திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அதிக விமானங்கள் திருச்சிக்கு வருகின்றன.
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்
அப்போது ஒரு பயணியின் காலணியில் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவை 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 209 கிராம் தங்கம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments