Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் உயிரிழப்பு இருவரையும் ஒரே தகன மேடையில் வைத்து எரியூட்டிய சோகம்

திருச்சி மாவட்டம் முசிரி தென் கள்ளர் தெருவில் வசித்தவர் முத்துவீரன் (80) விவசாயி. இவரது மனைவி ராமாமிர்தம் (79) வயது முதிர்வு காரணமாக முத்துவீரன் கடந்த 10 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராமமிர்ததிற்கும் கணவனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற கவலையால் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் ராமாமிர்தம் வீட்டிலேயே இறந்தார்.

படுத்த படுக்கையாக இருந்த முத்துவீரன் இதுகுறித்து மிகவும் வருத்தமடைந்தார். தனது இரு மகன்கள் மற்றும் மருமகள்களிடம் மனைவி இறந்த வேதனையை கூறி அழுது புலம்பியுள்ளார். ராமாமிருதத்திற்கு  இறுதி சடங்குகள் செய்துகொண்டிருந்தபோது படுக்கையில் படுத்தவாறு இறுதி காரிய நிகழ்வுகளை பார்த்த முத்துவீரன் திடீரென உயிரிழந்தார்.

இதனால் முத்துவீரன் குடும்பத்தினரும் துக்க நிகழ்வுக்கு வந்திருந்த உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத்தினர் ஆறுதல் அடைந்து மனதை தேற்றிக் கொண்டு முத்து வீரனுக்கும் இறுதி சடங்குகள் செய்து இருவரையும் தனித்தனி அமரர் ஊர்தி வாகனத்தில் ஏற்றி இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர் அங்கு ஒரே தகன மேடையில் இருவரையும் அருகருகே படுக்க வைத்து எரியூட்டினர். மனைவி இறந்த அதிர்ச்சி காரணமாக கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *