Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கப்படும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உறுதி

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முனைவர் இனிகோ இருதயராஜ் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சூறாவளி வாக்கு சேகரிப்பில் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றார்.

இதன் ஒருபகுதியாக இன்று கிழக்கு தொகுதிக்குட்பட்ட 20வது வட்டத்தில் பெரியபாளையம், ஆனந்தபுரம், கல்பாளையம், பென்ஷனர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்றும், திறந்த ஜீப்பில் நின்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் வாக்காளர்களிடம் இனிகோ இருதயராஜ் கூறுகையில்… திருச்சி நகரில் ஓடும் உய்யக்கொண்டான் கால்வாய் சீரமைக்கப்படும். மக்கள் பயன்படுத்தக்கூடிய நீர் ஓடிக்கொண்டிருந்த நிலையில் இருந்த உய்யக்கொண்டான் வாய்க்கால் தற்போது அதிமுக அரசாங்கம் சாக்கடை ஓடும் வகையில் மாற்றி விட்டது என்று குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் சாக்கடை நீர் கலக்காதவாறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு மீண்டும் உய்யக்கொண்டான் வாய்க்கால் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, திமுக பகுதி செயலாளர் மண்டி சேகர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *