Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மண்டல பொது மேலாளர்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் போக்குவரத்து கழகத்தில் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் 30 நபர்களுக்கும், ஓட்டுநர் 30 நபர்களுக்கும்,

தொழில்நுட்ப பணியாளர் 17 நபர்களுக்கும், பரிசோதகர் 2 நபர்களுக்கும், ஓட்டுநர் போதகர் ஒரு நபருக்கும், பாதுகாவலர் இரண்டு நபர்களுக்கும், உதவி பொறியாளர் ஒரு நபருக்கும், கிளை மேலாளர் ஒரு நபருக்கும், கண்காணிப்பாளர் ஒரு நபருக்கும், உதவி பொறியாளர் ஒரு நபருக்கும், மேலும் பொங்கல் பண்டிகை ஒட்டி சிறப்பாக வருவாய் ஈட்டிய நடத்துநர் ஒருவருக்கும்,

சிறப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி டீசல் செயல் திறன்மிக்க ஓட்டுநர் ஒருவருக்கும், மேலும் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் என மொத்தம் 108 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *