Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பூட்டி இருந்த வீட்டில் 17 பவுன் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரம் காந்தி தெற்கு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மற்றும் இவரது மனைவி மரகதம் (60). இவரது இரண்டாவது மருமகள் பிரசவத்திற்காக மரகதம் மற்றும் சுப்ரமணியன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த மூன்று பீரோவையும் உடைத்து தாலிக்கொடி, ஆரம், செயின், மோதிரம், கைச்செயின், உள்பட 17 அரை பவுன் தங்க நகைகளை திருடி போயிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மரகதம் மற்றும் சுப்ரமணியன் திருட்டு சம்பவம் குறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள், வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் தொட்டியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *