Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை! ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை..! – திருச்சி மேயர்

திருச்சி உறையூர் 10 வண்டு பகுதியில் பல இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர் இப்பகுதியில் வயிற்றுப்போக்கு வாந்தி காரணமாக சிறுமி உட்பட 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து ஐம்பதுக்கு மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர் இப்பகுதியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது குறித்து விளக்கம் கேட்டனர் மற்றும் சித்திரை திருவிழாவில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட பானங்களில் கலப்படம் ஏற்பட்டு இருக்கலாம் என மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் ஏற்புடையது அல்ல திருவிழா நடந்த நீண்ட நாட்கள் ஆகிவிட்டது எனக்கு ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் தெரிவித்தார் அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசி திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறும்போது

திருச்சி உறையூர் பகுதியில் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட காரணத்தால் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சொன்னதன் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளோம். தண்ணீரில் கழிவு நீர் கலந்துள்ளதாக கூறினார்கள். ஆனால் ஆய்வில் எந்த கலப்படமும் இல்லை. என்ன காரணம் என்பது தெரியவில்லை.

 சித்திரை திருவிழா நடைபெற்ற போது அங்கு கொடுக்கப்பட்ட பாணக்கம், நீர், மோரில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். இருப்பினும் அந்த தண்ணீரை சோதனை செய்வதற்காக நாளை காலை ஒவ்வொரு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட உள்ளோம். 

திருச்சி மாநகராட்சி தான் தினந்தோறும் நல்ல முறையில் தண்ணீர் தரக்கூடிய மாநகராட்சி ஆக உள்ளது. பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. எங்கும் குழி நோண்டவில்லை. ஆனால் தண்ணீரில் கலப்படம் எனக் கூறி இருக்கிறார்கள். தண்ணீரில் எந்த இடத்தில் கலப்படம் என ஆய்வு செய்து வருகிறோம். அண்டர் டிரைனேஜ் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்கள். அதனை சரி செய்ய அதிகாரிகளை நியமித்து உள்ளோம்.

இப்பகுதியில் லாரி மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் சோதனை நாளை நடைபெற உள்ளது.இதுவரை மாநகராட்சிக்கு எந்த புகாரும் கொடுக்கவில்லை. ஆனால் ஜூனியர் இன்ஜினியரிடம் புகார் கொடுத்ததாக கூறுகிறார்கள்.இதே போல திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த சம்பவம் கடந்த காலத்தில் நடந்தது. அதனை சரி செய்து உள்ளோம்.

40 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தநல்லூர், சீரா தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியவர்கள் 13 பேர், பெரியவர்கள் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் எனக் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *