Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மக்கள் நீதி மய்யத்தை  சேர்ந்த வேட்பாளர்கள் சட்டமன்றத்தில் அமர்வார்கள் என திருவெறும்பூர் வேட்பாளர் முருகானந்தம் நம்பிக்கை

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான முருகானந்தம் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது….. திருச்சி சட்டமன்ற தொகுதிகளில் மிக முக்கியமாக உள்ள முசிறி, துறையூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். மேலும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக போட்டியிடும் இந்த தொகுதிகளில் மநீம நிச்சயம் வெற்றி பெறும்.

திமுக 20 ஆண்டு காலமும், அதிமுக 25 ஆண்டு காலம் ஆட்சி செய்த இப்பகுதியில் நிறைவேற்றப்படாமல் இருக்கக் கூடிய பல செயல்திட்டங்களை நாங்கள் நிச்சயம் செய்வோம் என்று உறுதியளித்துள்ளார்.

நாங்களும் சாமானிய மக்களை போன்றவர்கள் தான் எனவே இந்த திராவிட கட்சியில் செய்யாத பணிகளை நாங்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்து தேர்தல் பிரசாரம் செய்வோம். நிச்சயம் மக்கள் நீதி மய்யத்தை  சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் அமர்வார்கள் என்று தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *