Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் ரமலான் சிறப்பு தொழுகை

திருச்சி தென்னூர் அண்ணா நகர் உணவு சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்கள் ரமலான் கொண்டாட்டத்தில் சிறப்பு தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை அன்பை பரிமாறிக் கொண்டனர். ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இஸ்லாமியர்களின் முக்கிய விழாவான ராம்ஜான் பெருவிழா மாநகரில் 99 பள்ளிவாசல்களிலும், 24 திறந்த வெளி மைதானங்களிலும் மற்றும் ஒரு உள்ளரங்கத்திலும் கூட்டு தொழுகை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்கள் சிறப்பாக பண்டிகையை கொண்டாடவும், குற்ற சம்பவம் ஏதும் நிகழாமல் தடுக்கவும் 124 வழிபாட்டு இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர 14 ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விழிப்புடன் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டுமெனவும், 9 சோதனை சாவடிகளில் போதுமான காவலர்கள் பணியிலிருந்து விழிப்புடன் பணிபுரிந்தனர். 

முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு ஒரு உதவி ஆணையர் மேற்பார்வையில் 10 போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் 89 ஆளினர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இதற்காக திருச்சி மாநகரம் முழுவதும் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய ப்ரியா தலைமையில், 2 காவல் துணை ஆணையர்கள், 7 காவல் உதவி ஆணையர்கள், 38 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் திரட்டப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஈடுப்படுத்தப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *