Thursday, August 28, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பத்து நாளில் ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலி -எமனாக மாறிய பேரிகாட்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி கடந்த 10 நாட்களில் ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கி இறந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் – விபத்தை தடுப்பு வைக்கப்பட்ட பேரிக்காடு எமனாக மாறிய சோகம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள பி.கே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதுடைய சுப்பிரமணி.விவசாயியான இவர் தனது தோட்டத்திற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றிருக்கிறார்.

அப்போது திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று சுப்பிரமணி ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி உடலில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பி.கே அகரத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள்

சென்னை – திருச்சி திருச்சி – சென்னை இரண்டு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.தகவலறிந்த லால்குடி கோட்டாச்சியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கடந்த 10 தினங்களில் பி.கே அகரம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் இதே இடத்தில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் சார்பில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது,ஆனால் அந்த பேரிகார்டு எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மறைப்பதால் தான் இந்த விபத்து ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர் .

அடிக்கடி இதுபோன்று விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளது. ஆகையால் சாலையை கடப்பதற்கு இந்த பகுதியில் சர்வீஸ் சாலை அல்லது சுரங்க வழித்தடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.இதுகுறித்து ஆவணம் செய்யப்பட்டு உயர் அதிகாரிகளிடம் பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து 

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை பின்னர் போலீசார் சீர் செய்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *