Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர் – கவிழ்க்க சதியா?

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் லாரி டயரை ரயில் தண்டவாளத்தில் வைத்து உள்ளனர். இதனால் கன்னியாகுமரி விரைவு ரயில் இன்ஜின் பகுதியில் தட்டி நான்கு பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தற்பொழுது திருச்சி ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்டவாளத்தில் லாரி டயரை வைத்த அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும், அதற்கான தடயங்களையும் சேகரித்து வருகின்றனர். 

இதனால் கன்னியாகுமரி விரைவு ரயில் 20 நிமிடம் தாமதமாக சென்றது. மேலும் மேலவாளாடி பழைய ரயில்வே கேட் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது. ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் இப்பகுதி மக்கள் நடத்தி வந்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்று உள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் தான் நடத்தினார்களா? அல்லது வேறு ஏதாவது தீவிரவாத செயலா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *