Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருவானைக்கோவிலில் மாநில தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ஸ்வச்தா செயல் திட்டம்!!

திருச்சியில் உள்ள மாநில ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் தொழில்நுட்பம் நிறுவனம் (SIHMCT) சார்பில் திருவானைக்கோவிலில் ஸ்வச்தா செயல் திட்டம் நடைபெற்றது.

தூய்மையான மற்றும் நிலையான இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஸ்வச்தா செயல் திட்ட பணியில் இந்த நிறுவனம் தற்போது தீவிரமாக பங்கேற்றுள்ளது. நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தும் இந்த திட்ட உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக பல முன்னெடுப்புகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

சுற்றுப்புற சுகாதாரத்தை பொறுத்தவரை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தூய்மையைப் பேணுவது குறித்து உள்ளூர் மக்களுக்கும், பல்வேறு பகுதியில் உள்ள மக்களுக்கும் சுகாதாரத்தை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களில் நிறுவனத்தை சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பெரும்பாலும் அடிப்படை சுகாதார நடைமுறைகள், சரியான முறையில் கழிவுகளை அகற்றுதல், சுத்தமான சுற்றுப்புறத்தின் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் தனிமனித ஆரோக்கியத்தில் சுகாதாரத்தின் பங்கு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *